ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பாரதிதாசன் செய்த பிழை: சா.திருவாசகம்

முனைவர் சி.முத்துக்கந்தன் மிகச்சிறந்த கவிஞர்; நவீன ஓவிய சிந்தனையாளர்; நாட்டார்கலை ஆய்வாளர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் விருந்துநிலை உதவிப் பேராசிரியராய் பணிபுரிந்துவருகிறார்.இவர் தற்போது ”செந்தலைக் குருவி” என்ற சிற்றிதழை தொடங்கியிருக்கிறார். 



அந்த இதழில் என்னருமை நண்பர் முனைவர் சா.திருவாசகத்தின் சிறப்பானதொரு சிறுகதை பிரசுரமாகியுள்ளது. அங்கதம் - எள்ளல் - இயல்பு - அரசியல் - அதிகாரத்திற்கெதிரான உண்மை - என விரியும் கதை, பேசாபொருளான கெளரவ விரிவுரையாளர்களின் நிலையையும் ஒருவாறு சுட்டி புதியவெளியில் விரிகிறது.

அதை இங்கே படப்பதிவாக மீள்பார்வைக்கு அளிப்பதில் மகிழ்கிறேன்.