வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 11 செப்டம்பர், 2014
திங்கள், 12 மே, 2014
சிறுவாலை: தொலைந்த வரலாறும் உயிர்தப்பிய ஓவியமும்
அதியனின் அழைப்பு
=============================
ஜோலார்பேட்டை நிகழ்ச்சியின் நடுவே அதியனின் அழைப்பு வந்தது. நீண்ட நாளுக்கு பிறகான அமைப்பு. உடனே பேசினேன்.
- தோழர் கீழ்வாலையைப் போல ஓவியம் எங்க ஊரிலும் இருக்கு தோழர் -
மகிழ்ச்சியில் வெளியே ஓடினேன்.
- நாளையே வருகிறேன். நீங்க எங்கேயும் போயிடாதிங்க- என்றேன்
நானும் நண்பர் செல்வன், செந்தில்பாலா, தோழர் ரவி எல்லோருமாய் திங்கள் மதியம் அங்கே போய்சேருவது வரையில் அவருக்கு நம்பிக்கையே இல்லை போல... இடையிடையே பேசிக்கொண்டே இருந்தார்.
தோழி ஆதிரை, சேகுவேரா திலிபன், முகிலன் புடைசூழ விருந்தே படைத்துவிட்டார் அதியன்.
அவற்றையெல்லாம்விட அவர் அழைத்துச்சென்ற அந்த அடுக்காம்பாறை, இரயிலு கல்லி, ஆட்டாம் பாறை, சொலக்கல்லி எனப் பல்வேறு பேருவைத்து செல்லமாக அவ்வூர் மக்களால் அழைக்கப்படும் குன்றுகளைக் காட்டியதுதான் உச்சம்.
துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு வரலாறு அது!
சிறுவாலை: தொலைந்த வரலாறும் உயிர்தப்பிய ஓவியமும்
=============================================================
தொல்லியல் தடங்கள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு கண்டுபிடிப்பு. தொல் பழங்கால ஓவியங்கள் முதலான அரிய வரலாற்றைத் தேக்கிவைத்துள்ள பூமியாக அறியப்படவேண்டிய பூமி விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், அன்னியூரை அடுத்த சிறுவாலை.
கீழ்வாலை, செத்தவரை முதலான இடங்களில் கிடைத்துள்ள கி.மு 3000 க்கும் முந்தையதாக கணிக்கத்தக்க தொல்பழங்கால ஓவியங்கள் தற்போது சிறுவாலையிலும் கிடைத்துள்ளது.
ஊருக்கு கிழக்கே இயற்கையாக அமைந்த பல்வேறு குகைதளங்களைக்கொண்ட சிறு சிறு குன்றுகள் பல அமைந்துள்ளன.
அவை ஒவ்வொன்றையும் அவ்வூர்மக்கள் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு பாறையிலும் பல்வேறு நாட்டார்தெய்வ வழிபாடுகளை நடத்தி இதுவரை காத்துவந்துள்ளனர்.
அவை பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றின் தடங்களைச் சுமந்து உயிர்வாழ்வதை அறியாத மக்கள் அண்மைக்காலமாய் ஆளாளுக்கு பங்குபோட்டு பிரித்து வெடிவைத்து சல்லிகளாக்கியுள்ளனர்.
இந்த குன்றுக்கொலை சேதாரங்களுக்கு மத்தியில்தான் தற்செயலாக அதியன் அதைக் கவனித்துள்ளார்.
வெடிவைத்து தகர்க்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாய் இருக்கும் இரயில்பெட்டி பாறை எனப்படும் குன்றின் ஒருபகுதியில்தான் ஒன்றரை மீட்டர் நீலமும், 50 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட அந்த தொல்பழங்கால ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
நான் கையில் கொண்டுபோன நீர்தூவலால் நீர் தெளித்து ஆய்வு செய்தோம். நண்பர் செல்வன், தோழர் ரவி, அதியன், செந்தில்பாலா என ஒவ்வொருவராய் ஓவியத்தைக் கண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
மீண்டும் மீண்டும் சோதித்து இறுதியாக, உறுதிசெய்த முடிவு இதுதான்.
அது ஒரு இனக்குழு, வேட்டையாடியப்பின் உணவுகளைப் பாதீட்டுக்கு எடுத்துச்செல்வதைச் சொல்லும் ஓவியம்.
முதல்பகுதியில் தலைவி எனக் கருதத்தக்க வகையில் சடாமுடியுடன் பெரிய உருவம் காணப்படுகிறது, அவ்வுருவத்தைச் சூழ்ந்து ஐந்து சிறிய உருவங்கள் காணப்படுகின்றன. பின்பக்கம் உள்ள உருவங்கள் ஒருப்பக்கம் கையைப் பிணைத்துக்கொண்டு உள்ளன. ( சடங்கு அல்லது ஆட்டம் எனவும் கொள்ளலாம்,)
அடுத்து, இரண்டு சக்கரங்கள் காணப்படுகின்றன. (முதலில் உள்ள சக்கரம் முக்கால்வாசி மட்டுமே தெரிகிறது). அவைகள் இரண்டும் தனித் தனி வண்டிகள் போல உள்ளன. அவைகளின் மேல் உள்ள உருவம் அறியமுடியவில்லை, அவற்றின் முன்னால் உள்ள பகுதியில் ஏதேனும் விலங்குகள் வண்டியை இழுப்பதற்கான தடயமும் இல்லை.
ஒருவேளை, மேற்படி சொன்ன தலைவியின் பின்னால் உள்ள கைபிணைத்த மனித உருவங்கள் இழுத்துவருவதாக கொள்ளவும் இடம் உள்ளது.
அவ்வண்டிகளின் பின்னால் பெரியதும், சின்னதுமான இரு மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவை அவ்வண்டிகளின் பின்னால் காவல் காத்தபடி வருவதாகவோ, வண்டியை மேட்டுப் பகுதிகளில் பின்னிருந்தபடி தள்ளி விடுபவர்களாகவோ கொள்ளலாம்.
ஆக, தலைவி புடைசூழ வேட்டையாடியப்பின் வேட்டையாடிய பொருட்களை வண்டியில் வைத்து தம் இருப்பிடத்திற்கு இழுத்து செல்வதான ஓவியமாக இதனைக் கணிக்கமுடிகிறது.
இதையும் இதன் முக்கியத்துவத்தையும் விளக்கியயுடன் அவ்வூர் மக்கள் - இந்தமாரி படம் அந்த குன்னுல இருந்தது, இந்த குன்னுல நெரைய இருந்து - என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
- நீங்கமட்டும் பத்து வருசத்துக்கு முன்னாடி, ஏன் 5 வருசத்துக்கு முன்னாடி வந்து சொல்லியிருந்திங்கனா ஒருத்தன் மலைய வெடிச்சியிருக்கமாட்டான். எல்லாம் போயிடுச்சே! -
நமக்குள்ளும்தான் இந்த புலம்பல்... இன்னுமும் நாம சும்மா இருந்தா எல்லாம் போயிடும். இன்னும் நெரைய இருக்குது. இருக்கிறத்தையாவது காப்பாத்துவோம்.
தேடுங்க மக்களா..
=============================
ஜோலார்பேட்டை நிகழ்ச்சியின் நடுவே அதியனின் அழைப்பு வந்தது. நீண்ட நாளுக்கு பிறகான அமைப்பு. உடனே பேசினேன்.
- தோழர் கீழ்வாலையைப் போல ஓவியம் எங்க ஊரிலும் இருக்கு தோழர் -
மகிழ்ச்சியில் வெளியே ஓடினேன்.
- நாளையே வருகிறேன். நீங்க எங்கேயும் போயிடாதிங்க- என்றேன்
நானும் நண்பர் செல்வன், செந்தில்பாலா, தோழர் ரவி எல்லோருமாய் திங்கள் மதியம் அங்கே போய்சேருவது வரையில் அவருக்கு நம்பிக்கையே இல்லை போல... இடையிடையே பேசிக்கொண்டே இருந்தார்.
தோழி ஆதிரை, சேகுவேரா திலிபன், முகிலன் புடைசூழ விருந்தே படைத்துவிட்டார் அதியன்.
அவற்றையெல்லாம்விட அவர் அழைத்துச்சென்ற அந்த அடுக்காம்பாறை, இரயிலு கல்லி, ஆட்டாம் பாறை, சொலக்கல்லி எனப் பல்வேறு பேருவைத்து செல்லமாக அவ்வூர் மக்களால் அழைக்கப்படும் குன்றுகளைக் காட்டியதுதான் உச்சம்.
துக்கமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு வரலாறு அது!
=============================================================
தொல்லியல் தடங்கள் நிறைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒரு கண்டுபிடிப்பு. தொல் பழங்கால ஓவியங்கள் முதலான அரிய வரலாற்றைத் தேக்கிவைத்துள்ள பூமியாக அறியப்படவேண்டிய பூமி விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம், அன்னியூரை அடுத்த சிறுவாலை.
கீழ்வாலை, செத்தவரை முதலான இடங்களில் கிடைத்துள்ள கி.மு 3000 க்கும் முந்தையதாக கணிக்கத்தக்க தொல்பழங்கால ஓவியங்கள் தற்போது சிறுவாலையிலும் கிடைத்துள்ளது.
ஊருக்கு கிழக்கே இயற்கையாக அமைந்த பல்வேறு குகைதளங்களைக்கொண்ட சிறு சிறு குன்றுகள் பல அமைந்துள்ளன.
அவை ஒவ்வொன்றையும் அவ்வூர்மக்கள் ஒவ்வொரு பெயரிட்டு ஒவ்வொரு பாறையிலும் பல்வேறு நாட்டார்தெய்வ வழிபாடுகளை நடத்தி இதுவரை காத்துவந்துள்ளனர்.
அவை பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றின் தடங்களைச் சுமந்து உயிர்வாழ்வதை அறியாத மக்கள் அண்மைக்காலமாய் ஆளாளுக்கு பங்குபோட்டு பிரித்து வெடிவைத்து சல்லிகளாக்கியுள்ளனர்.
இந்த குன்றுக்கொலை சேதாரங்களுக்கு மத்தியில்தான் தற்செயலாக அதியன் அதைக் கவனித்துள்ளார்.
வெடிவைத்து தகர்க்கப்பட்டு குத்துயிரும் கொலையுயிருமாய் இருக்கும் இரயில்பெட்டி பாறை எனப்படும் குன்றின் ஒருபகுதியில்தான் ஒன்றரை மீட்டர் நீலமும், 50 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட அந்த தொல்பழங்கால ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.
நான் கையில் கொண்டுபோன நீர்தூவலால் நீர் தெளித்து ஆய்வு செய்தோம். நண்பர் செல்வன், தோழர் ரவி, அதியன், செந்தில்பாலா என ஒவ்வொருவராய் ஓவியத்தைக் கண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.
மீண்டும் மீண்டும் சோதித்து இறுதியாக, உறுதிசெய்த முடிவு இதுதான்.
அது ஒரு இனக்குழு, வேட்டையாடியப்பின் உணவுகளைப் பாதீட்டுக்கு எடுத்துச்செல்வதைச் சொல்லும் ஓவியம்.
முதல்பகுதியில் தலைவி எனக் கருதத்தக்க வகையில் சடாமுடியுடன் பெரிய உருவம் காணப்படுகிறது, அவ்வுருவத்தைச் சூழ்ந்து ஐந்து சிறிய உருவங்கள் காணப்படுகின்றன. பின்பக்கம் உள்ள உருவங்கள் ஒருப்பக்கம் கையைப் பிணைத்துக்கொண்டு உள்ளன. ( சடங்கு அல்லது ஆட்டம் எனவும் கொள்ளலாம்,)
அடுத்து, இரண்டு சக்கரங்கள் காணப்படுகின்றன. (முதலில் உள்ள சக்கரம் முக்கால்வாசி மட்டுமே தெரிகிறது). அவைகள் இரண்டும் தனித் தனி வண்டிகள் போல உள்ளன. அவைகளின் மேல் உள்ள உருவம் அறியமுடியவில்லை, அவற்றின் முன்னால் உள்ள பகுதியில் ஏதேனும் விலங்குகள் வண்டியை இழுப்பதற்கான தடயமும் இல்லை.
ஒருவேளை, மேற்படி சொன்ன தலைவியின் பின்னால் உள்ள கைபிணைத்த மனித உருவங்கள் இழுத்துவருவதாக கொள்ளவும் இடம் உள்ளது.
அவ்வண்டிகளின் பின்னால் பெரியதும், சின்னதுமான இரு மனித உருவங்கள் காணப்படுகின்றன. அவை அவ்வண்டிகளின் பின்னால் காவல் காத்தபடி வருவதாகவோ, வண்டியை மேட்டுப் பகுதிகளில் பின்னிருந்தபடி தள்ளி விடுபவர்களாகவோ கொள்ளலாம்.
ஆக, தலைவி புடைசூழ வேட்டையாடியப்பின் வேட்டையாடிய பொருட்களை வண்டியில் வைத்து தம் இருப்பிடத்திற்கு இழுத்து செல்வதான ஓவியமாக இதனைக் கணிக்கமுடிகிறது.
இதையும் இதன் முக்கியத்துவத்தையும் விளக்கியயுடன் அவ்வூர் மக்கள் - இந்தமாரி படம் அந்த குன்னுல இருந்தது, இந்த குன்னுல நெரைய இருந்து - என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
- நீங்கமட்டும் பத்து வருசத்துக்கு முன்னாடி, ஏன் 5 வருசத்துக்கு முன்னாடி வந்து சொல்லியிருந்திங்கனா ஒருத்தன் மலைய வெடிச்சியிருக்கமாட்டான். எல்லாம் போயிடுச்சே! -
நமக்குள்ளும்தான் இந்த புலம்பல்... இன்னுமும் நாம சும்மா இருந்தா எல்லாம் போயிடும். இன்னும் நெரைய இருக்குது. இருக்கிறத்தையாவது காப்பாத்துவோம்.
தேடுங்க மக்களா..
செய்திகள் பரவியது
==========================
தினமணி நாளிதழில் ( 08.05.2014 )
தி இந்து நாளிதழில் ( 08.05.2014 )
தின பூமி நாளிதழில் ( 09.05.2014 )
Deccan chronicle நாளிதழில் ( 09.05.2014 )
திங்கள், 3 மார்ச், 2014
கங்கு 2: 2014
சென்னைப் பல்கலைக் கழகம், இலக்கியத்துறையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தொல்லியல், வரலாற்று இடங்களுக்கு மாணவர்கள், ஆய்வாளர்கள் நேரடியாக சென்று அறியும் கங்கு என்ற நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டின் இரண்டாம் கங்கு செஞ்சிப்பகுதியில் இரண்டு நாள் பயணத்தில் பத்து இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. (ஆனால் எட்டு இடங்கள்தான் பார்க்கமுடிந்தது). உடன், மயிலை சீனி.வேங்கடசாமியின் மருமகன் புலவர் ஆ.சண்முகம், கல்வெட்டறிஞர்கள் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி லெனின் ஆகியோர் வந்திருந்திருந்தனர்.
அந்த பயணப்பதிவாக இது அமைகிறது.
தொல்பழங்கால ஓவியங்கள்: கீழ்வாலை
=================================
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் கீழ்வாலை கிராமம் உள்ளது. இங்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள் 80, 90களில் கண்டறியப்பட்டது.
இரத்தக்குடைக்கல் எனப்படும் சிறிய பாறை குகைத்தளங்களில் வரையப்பட்ட இவ்வோவியங்கள் எகிப்து, கிரேக்க, செவ்விந்திய தொல்பழங்கால ஓவியங்களோடு ஒப்புமை உடையது என பவுன்ராசு கருத்துரைத்துள்ளார். இவற்றின் காலத்தை கி.மு 500 - கி.மு 1000 என பி.எல்.சாமி வரையறுக்கிறார்.
இரா.மதிவேந்தன் போன்றவர்களால் சிந்துவெளி எழுத்துக்களோடு ஒப்பிட்டு பேசப்பெறும் இவ்வோவியங்களைச் சொற்களின் தொகுப்பு என்கிறார் கா.ராஜன்.
இங்கு விலங்கு முக மனித ஓவியங்கள் நிறைய கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன. விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம் என்கிறார் காந்திராஜன்.
படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம் காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.
இவைகளில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும் பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.
இவ் ஓவியங்கள் இரும்புக்கால ஓவியங்கள் எனவும், பெருங்கற்கால ஓவியங்கள் எனவும் தொல்லியல்துறை அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.
இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடையாநத்தம் அருகில் உள்ள விசிறிப்பாறை, ஆலம்பாடி பாறை ஓவியங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறை ஆய்வேடுகளில், இந்தியாவின் மிக முக்கியத்துவம் மிக்க தொல்லியல் இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
##
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கீழ்வாலை தொல்பழங்கால ஓவியங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஓவியர் சந்துரு அவர்களும் அவரது மாணவர்களும் 2000தில் இவ்வோவியங்களை படியெடுத்து வரைந்து கண்காட்சி அமைத்தனர். அவற்றின் சில ஓவியங்கள் சென்னைப் பல்கலைக் கழகம் - இலக்கியத்துறையால் பாதுகாக்கப்படுகின்றன.
##
இங்கிருந்து தொடங்கியது கங்கு 2: 2014. (21.02.2014)
அந்தவகையில் இந்த ஆண்டின் இரண்டாம் கங்கு செஞ்சிப்பகுதியில் இரண்டு நாள் பயணத்தில் பத்து இடங்களுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. (ஆனால் எட்டு இடங்கள்தான் பார்க்கமுடிந்தது). உடன், மயிலை சீனி.வேங்கடசாமியின் மருமகன் புலவர் ஆ.சண்முகம், கல்வெட்டறிஞர்கள் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி லெனின் ஆகியோர் வந்திருந்திருந்தனர்.
அந்த பயணப்பதிவாக இது அமைகிறது.
தொல்பழங்கால ஓவியங்கள்: கீழ்வாலை
=================================
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் கீழ்வாலை கிராமம் உள்ளது. இங்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள் 80, 90களில் கண்டறியப்பட்டது.
இரத்தக்குடைக்கல் எனப்படும் சிறிய பாறை குகைத்தளங்களில் வரையப்பட்ட இவ்வோவியங்கள் எகிப்து, கிரேக்க, செவ்விந்திய தொல்பழங்கால ஓவியங்களோடு ஒப்புமை உடையது என பவுன்ராசு கருத்துரைத்துள்ளார். இவற்றின் காலத்தை கி.மு 500 - கி.மு 1000 என பி.எல்.சாமி வரையறுக்கிறார்.
இரா.மதிவேந்தன் போன்றவர்களால் சிந்துவெளி எழுத்துக்களோடு ஒப்பிட்டு பேசப்பெறும் இவ்வோவியங்களைச் சொற்களின் தொகுப்பு என்கிறார் கா.ராஜன்.
இங்கு விலங்கு முக மனித ஓவியங்கள் நிறைய கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன. விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல் என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம் என்கிறார் காந்திராஜன்.
படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம் காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவை முகங்களாகவே காணப்படுகின்றன.
இவைகளில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும் பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.
இவ் ஓவியங்கள் இரும்புக்கால ஓவியங்கள் எனவும், பெருங்கற்கால ஓவியங்கள் எனவும் தொல்லியல்துறை அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.
இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடையாநத்தம் அருகில் உள்ள விசிறிப்பாறை, ஆலம்பாடி பாறை ஓவியங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறை ஆய்வேடுகளில், இந்தியாவின் மிக முக்கியத்துவம் மிக்க தொல்லியல் இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
##
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கீழ்வாலை தொல்பழங்கால ஓவியங்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஓவியர் சந்துரு அவர்களும் அவரது மாணவர்களும் 2000தில் இவ்வோவியங்களை படியெடுத்து வரைந்து கண்காட்சி அமைத்தனர். அவற்றின் சில ஓவியங்கள் சென்னைப் பல்கலைக் கழகம் - இலக்கியத்துறையால் பாதுகாக்கப்படுகின்றன.
##
இங்கிருந்து தொடங்கியது கங்கு 2: 2014. (21.02.2014)
சனி, 10 டிசம்பர், 2011
வெள்ளி, 9 டிசம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


