ஞாயிறு, 13 மே, 2012

பாடகர் செந்தில் வேலன்



பாடகர் செந்தில் வேலன் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - அருண் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பணியாற்றுகிறார்.

அண்மையில் களவாணி படத்தில் பிரளயன் எழுதிய நாடகப்பாடல் ஒன்றைப் பாடியிருந்தார் (இந்த பாடலைக் கேட்க அருகே உள்ள லிங்கைச் சொடுக்குக) http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGSKU0009'&lang=ta

10 ஆண்டுகளுக்கும் மேலாக த.மு.எ.க.ச மேடைகளில் வைகறை கலைக்குழுவினரோடும், தனியாகவும் பாடிவருகிறார். இவர், தமிழ் திரையுலகம் இன்னும் பயன்படுத்தவேண்டிய சிறந்த ஆளுமை.

06.05.2012 அன்று நறுமுகை சார்பில் செஞ்சியில் நடைபெற்ற நாவல் குமாரகேசனின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் அவர் நான்கு பாடல்கள் பாடி அனைவரையும் கவ்ர்ந்தார்.

அவரைச் சிறப்பிக்கும் விதமாக அப்பதிவை இங்கே பதிவு செய்கிறேன். 
( அவருடன் தொடர்புகொள்ள... 9442311491 )

1.அழுகுரல் சத்தம்...


http://www.youtube.com/watch?v=ETpdeJe96so
2.ஆடல் பாடல் பேச்சில் எல்லாம்...


3. எனக்கெனவே ஒருத்தியவ....

இப்பாடலை எழுதியவர் : பேரா. முனைவர் வே. நெடுஞ்செழியன், திருவண்ணாமலை.
( குறிப்பு: விரைவில் பேராசிரியரின் பாடல்கள் ஒலிப்பேழையாக வெளிவர இருக்கிறது. )



4. மல்லுவேட்டிக் கட்டிக்கிட்டு...
.








வெள்ளி, 4 மே, 2012

நாவல் குமாரகேசன் கவிதைகள்


 நாவல் குமாரகேசனின்  சுழிக்காற்று என்ற புதிய கவிதை நூலில் இருந்து...


1.
 எதிர்பாராமல் பெய்த
 பெரு மழையால்
 குளத்தில் நீர்மட்டம்
 உயர்ந்து கொண்டிருந்தது

 பக்கம்பாட்டு விவசாயிகள்
 மகிழ்ந்து போனார்கள்

 இனம்புரியாத கவலையில்
 மூழ்கிக்கிடந்தது
 குளத்துக்குள்ளிருந்த வேலமரத்தில்
 கூடுகட்டியிருந்த மைனா...!




2.
 நாலணா எட்டணா
 அடுக்குப் பானைக்குள்
 மறைத்து வைத்திருப்பாள்
 பாட்டி

 அஞ்சும் பத்துமாக
 மடியில் பத்திரப்படுத்தியிருப்பார்
 தாத்தா

 பத்தும் இருபதுமாக
 செலவுப் பெட்டிக்குள்
 ஒளித்து வைத்திருப்பாள்
 அம்மா

 பலகாலம் இவர்கள்
 அப்பாவிற்குத் தெரியாமல்
 மறைத்தும் ஒளித்தும்
 வைத்திருப்பார்கள் காசை

 அப்பா மட்டும்
 ஐம்பதும் நூறுமாய்
 எல்லோருக்கும் தெரியும்படி
 ஒளிக்காமல் வைத்திருப்பார்
 கள்ளுக்கடையில் கடன்?
#


narumugai jra