வெள்ளி, 4 மே, 2012

நாவல் குமாரகேசன் கவிதைகள்


 நாவல் குமாரகேசனின்  சுழிக்காற்று என்ற புதிய கவிதை நூலில் இருந்து...


1.
 எதிர்பாராமல் பெய்த
 பெரு மழையால்
 குளத்தில் நீர்மட்டம்
 உயர்ந்து கொண்டிருந்தது

 பக்கம்பாட்டு விவசாயிகள்
 மகிழ்ந்து போனார்கள்

 இனம்புரியாத கவலையில்
 மூழ்கிக்கிடந்தது
 குளத்துக்குள்ளிருந்த வேலமரத்தில்
 கூடுகட்டியிருந்த மைனா...!




2.
 நாலணா எட்டணா
 அடுக்குப் பானைக்குள்
 மறைத்து வைத்திருப்பாள்
 பாட்டி

 அஞ்சும் பத்துமாக
 மடியில் பத்திரப்படுத்தியிருப்பார்
 தாத்தா

 பத்தும் இருபதுமாக
 செலவுப் பெட்டிக்குள்
 ஒளித்து வைத்திருப்பாள்
 அம்மா

 பலகாலம் இவர்கள்
 அப்பாவிற்குத் தெரியாமல்
 மறைத்தும் ஒளித்தும்
 வைத்திருப்பார்கள் காசை

 அப்பா மட்டும்
 ஐம்பதும் நூறுமாய்
 எல்லோருக்கும் தெரியும்படி
 ஒளிக்காமல் வைத்திருப்பார்
 கள்ளுக்கடையில் கடன்?
#


narumugai jra

கருத்துகள் இல்லை: