தனித்தமிழ் அறிஞர் த.சரவணத்தமிழன்
திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்ற அமைப்பினைத் தொடங்கி பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர்.
நல்ல தமிழோசை, இயற்றமிழ், அறிவுப் பாய்ச்சல் ஆகிய இதழ்களை நடத்தியவர்.
இவரின் தமிணூல், தனித்தமிழ் நாவலரின் கனித்தமிழ்க் கட்டுரைகள், இருநூல் பிழிவு, பழமையிலே பூத்த புதுமை மலர், யாப்பு நூல் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.
இதில் தமிணூல் 20ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப மரபான நூற்பா வடிவில் எழுத்து மற்றும் சொல்லிலக்கணம் பேசும் இலக்கண நூல்.
யாப்பு நூல் என்ற அவரது யாப்பிலக்கண நூல் திரைப்படப் பாடல்கள், புதுக்கவிதை ஆகியவற்றுக்கும் புதிய முறையில் இலக்கணம் கூறமுற்படும் சிறப்பிற்குரியது.
சொந்த ஊர் தஞ்சை மாவட்ட பாபநாசம் வட்டம், காந்தாவனம் கிராமம். (அடியார்க்குமங்களம்) இறுதி காலங்களில் சென்னைத் தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்துவந்தார்.
தமிழாசிரியராக, தலைமையாசிரியராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் தொகுப்பாசிரியராக சில காலமும், தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
தமிழ் வளர்ச்சித்துறை குழுவில் இலக்கணப்பிரிவில் சில காலமும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.
திருவாரூரில் திரு.வி.க.வுக்கு சிலை வைக்க காரணமாக இருந்தவர்.
மேற்படி சிறப்புக்குரிய
த.சரவணத்தமிழன் 26.08.2012 அன்று இரவு 8 மணி அளவில்
சென்னைப் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை
எய்தினார். அவரது நினைவைப் போற்றி சென்னப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை 12.09.2012 அன்று நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது. அதன்
காணொளி பதிவைக் கீழே காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக