சனி, 18 பிப்ரவரி, 2012

செந்தில்பாலாவின் கவிதைகள் : 2



பாதை

சிறு ஊசிகளாக் தெரிவது
கடபாறைகளாகின்றன.
துரும்பென வழியிலிருப்பது
வழிமறிக்கும் தூண்களாகின்றன
சிறு கற்களெல்லாம் பாறைகளாகின்றன

இடம் தெரியாமல் கிடக்கும் சிறுகல்லுக்கொன்றும்
எல்லாவற்றையும் மறைத்து நிற்கும்
பெரும் பாறைக்கொன்றுமாக 
விரிந்து கிடக்கும் கால்களுக்கிடையில்
நகராமலேயே நிற்கிறது
பாதை.
#


#

எனைக்குறித்து எந்த கவலையுமற்று
வந்து கொண்டிருக்கின்றன நெருக்கடிகள்

சுற்றியிருப்பவைகள்கூட எனைக்குறித்து
கவலைபடுவதாக இல்லை.

சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியும் சரி
எரியும் குழல்விளக்கும் சரி
நிறுத்துனால் நின்றுவிடும் போலிருக்கிறது.
#

#

எந்த மரத்தினடியில்

இளைப்பாறினேனோ
அதே மரம்தான்
என்மேல் சரிந்து
தன் மரணத்தை அறைந்தது.




#




இன்றைய எனக்கான பகல்நேரம்
ஜன்னலில் எட்டிப்பார்த்தபடி
காத்திருப்பது க்ண்டு
தாழ்பாலுக்கு ஓய்வளித்து
கதவு திறக்க
வெப்பத்தின் வலி பொருக்காது
புரண்டு கொண்டிருந்தது
நேற்றைய குப்பைகள்.
#
#

எதையாவது எழுதாமல்

தூங்க முடிவதில்லை என்பதெல்லாம்
நிச்சயம் எனக்கு கிடையாது

இதையெல்லாம் எழுதியிருக்கலாமே
என்றபடியே தூங்கிக் கொண்டிருக்கிறேன்.
#



1 கருத்து:

Unknown சொன்னது…

கவிதைகள் நன்றாக உள்ளன.